செய்தி விளையாட்டு

SLvsBAN – முதல் நாள் முடிவில் 368 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

இலங்கை-வங்காளதேசம் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 153.4 ஓவர்களில் 484 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்களும், கேப்டன் சாண்டோ 148 ரன்கள் அடித்து அசத்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை சிறப்பாக பேட்டிங் செய்து வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஆன பதும் நிசங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலு சேர்த்தார்.

தினேஷ் சண்டிமால் தனது பங்குக்கு 54 ரன்களும், மேத்யூஸ் 39 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த நிசங்கா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 187 ரன்களில் அவுட்டானார்.

3ம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் அடித்துள்ளது. கமிந்து மெண்டிஸ் 37 ரன்களுடனும், தனஞ்சய டி சில்வா 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி இன்னும் 127 ரன்கள் பிந்தங்கி உள்ள நிலையில் நாளை 4வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content