செய்தி விளையாட்டு

SLvsAUS – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 281 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டீஸ் 101, அசலங்கா 78, நிஷான் மதுஷ்கா 51 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஷாட், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது.

மேத்யூ ஷாட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 9 ரன்னில் ஹெட் 18 ரன்னிலும் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 38 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!