அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக்கட்சி மீண்டெழும்: கடமையேற்ற கையோடு சாமர சூளுரை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) நிச்சயம் மீண்டெழும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தயநாயக்க எம்.பி. Chamara Sampath Dayanayake தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட அவர், இன்று (05) கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

“ ஜே.வி.பியானது 3 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் ஆட்சியை பிடித்தது. ஏற்ற, இறக்கங்களை அக்கட்சி சந்தித்தது. இன்று 159 எம்.பிக்கள் இருக்கின்றனர்.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நிச்சயம் மீண்டெழும். அதை நோக்கி எமது பயணம் தொடரும். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.

கட்சியை விட்டு சென்றவர்கள் நிச்சயம் மீண்டும் வருவார்கள், பல வருடங்கள் கட்சி தலைமையகம் பக்கம் வராதவர்கள்கூட இன்று வந்தார்கள். இதுதான் முன்னோக்கி செல்வதற்கான மாற்றம்.” – எனவும் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!