இந்தியா

பீகாரில் கோர விபத்தில் சிக்கி அறுவர் உயிரிழப்பு!

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தின் புல்லிடுமர் காவல் நிலைய பகுதியில் நேற்று சொகுசு கார் நடைபாதையில் மோதி விபத்துக்குள்ளானதில் நடைபாதையில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,

இதையடுத்து கார் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

இந்த கோர விபத்தில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 2 visits today)
See also  குஜராத்தில் கட்டுமான தளத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் பலி
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content