ஆசியா

சிங்கப்பூரில் வரம்பைவிட வேகமாக வாகனங்களை ஓட்டினால் அமுலாகும் கடுமையான சட்டம்

சிங்கப்பூரில் வரம்பைவிட வேகமாக வாகனங்களைச் ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கப்படவுள்ளது.

வீதிகளில் மரணங்களையும் காயங்களையும் ஏற்படுத்தும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அவ்வாறு செய்யப்படவிருக்கிறது.

அடுத்த ஆண்டு முதல், அபராதம் 150 வெள்ளிவரை அதிகரிக்கவிருக்கிறது. வேகவரம்பை மீறுவோருக்குக் கூடுதலாக 6 குற்றப்புள்ளிகள் கொடுக்கப்படும்.

கடந்த ஆண்டு வேகவரம்பை மீறி வாகனமோட்டிய சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 65 சதவீதம் கூடியது. கிட்டத்தட்ட 192,000 சம்பவங்கள் பதிவாயின.

போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டில் கூடியது. அவற்றில் 142 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டில் அதுவே ஆக அதிகமாகும்.

ஐந்தாண்டுக்கு முன்பிருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அது சுமார் 70 சதவீதம் அதிகமாகும்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!