ஆசியா

சிங்கப்பூரில் சோகம் – தந்தை இறந்தது கூட தெரியாமல் 5 நாள் சடலத்துடன் இருந்த மகன்

சிங்கப்பூரில் பிளாக் 25 ஹூகாங் அவென்யூ 3 இல் உள்ள வீட்டில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

14 ஆம் திகதி அன்று காலை 11:20 மணியளவில் 81 வயது முதியவரின் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு அருகில் உடற்குறைபாடு உடைய மகன் ஒருவர் இருந்துள்ளார்.

தன் தந்தையின் பராமரிப்பை நம்பி வாழ்ந்த மகன், சடலத்துடன் குறைந்தது ஐந்து நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

ஷின் மின்னிடம் இது பற்றி கூறிய பக்கத்து வீட்டுக்காரர்; அந்த முதியவரின் மகனுக்கு 30 அல்லது 40 வயதுக்குள் இருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

அவரின் மகனுக்கு நுண்ணறிவு (IQ) குறைவு என்றும், அவர் பெரும்பாலும் தந்தையையே சார்ந்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது. இந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் முதியவரைக் கடைசியாகப் பார்த்ததாக பக்கத்து வீட்டுக்காரர் நினைவு கூர்ந்தார்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் இரவிலிருந்தே துர்நாற்றம் வீசுவதைக் கவனித்ததாக அங்கு வசிக்கும் பெண் ஒருவர் கூறியுள்ளார். இதனை அடுத்து, SCDF அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content