எரிபொருள் QR குறியீட்டு மீண்டும் வருவதற்கான அறிகுறிகள்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/06/fuel-jpg.webp)
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவியதன் காரணமாக, நாட்டில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பான பணிப்புரையை அண்மையில் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை நல்ல முகாமைத்துவ முறைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர், நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக எரிசக்தி அமைச்சும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.
மீண்டும் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் முன்னைய QR குறியீட்டு முறை மீண்டும் ஆரம்பிக்கப்படுமா அல்லது நிர்வகிக்கப்படும் வேறு விநியோக முறைமை நடைமுறைப்படுத்தப்படுமா என்பதை தீர்மானிக்கவே இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.