இலங்கை

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா இல்லையா? – நாமல் கருத்து!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை அவரது கட்சியே தீர்மானிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற பெண் அமைப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் அவரைப் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே சிறந்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் எம்மைப் போன்றவர்கள் மாத்திரமின்றி, 97 வயதுடைய எனது பாட்டியின் கழுத்தையும் நெறிக்கின்றது.

10 ஆண்டுகளின் பின்னர் வாக்குமூலளிப்பதற்கு அழைப்பாணை விடுக்கப்படுகிறது. சில அரசியல் சக்திகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் வங்குரோத்தடையும் போது இவ்வாறு தான் செயற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!