இலங்கை செய்தி

இலங்கையில் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை – கல்வி அமைச்சர் எடுத்த தீர்மானம்

இலங்கையில் மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரியவந்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மூன்றாண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை,தற்போது புதிதாக இணைக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் எதிர்காலத்தில் இணைக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைகள் 11,048 ஆக அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கு 2,500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!