ஜெருசலேமில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி!

ஜெருசலேமில் இன்று (30.11) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு பாலஸ்தீன ஆயுததாரிகள் பேருந்து நிலையத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் விரைவாக செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து தாக்குதல்தாரிகளை கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)