கனடாவில் லாரி ஓட்டுநர்கள் இடையே துப்பாக்கிச் சூடு – 3 இந்திய வம்சாவளியினர் கைது
கனடாவின்(Canada) பிராம்ப்டனில்(Brampton) இரண்டு லாரி ஓட்டுநர்கள் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக மூன்று இந்திய வம்சாவளி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்காவது சந்தேக நபரைத் தேடும் பணி இன்னும் நடைபெற்று வருவதாக பீல் பிராந்திய காவல்துறையினர்(Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்ஜோத் பட்டி(Manjot Bhatti), நவ்ஜோத் பட்டி(Navjot Bhatti) மற்றும் அமன்ஜோத் பட்டி(Amanjot Bhatti) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் மெக்வீன் டிரைவ்(McQueen Drive) மற்றும் காசில்மோர்(Castlemore) சாலை பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த துப்பாக்கி சூட்டின் போது ஒருவர் காயமடைந்துள்ளார், ஆனால் காயங்கள் பெரிதாக இல்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.





