இலங்கையின் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு – தாக்குதல்தாரி கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் புத்தளம் பாலவிய பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று போலீசார் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இன்று (19) காலை பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்காக 12 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நிறுத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
(Visited 7 times, 1 visits today)