ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் செய்த அதிர்ச்சி செயல்!

சிங்கப்பூரில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தேவையுடைய சிறுவனை அடித்து துன்புறுத்திய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது முதலாளியின் மகனான எட்டு வயதுச் சிறுவன், பள்ளிக்குத் தயாராவதில் மந்தமாக இருந்ததால் விரக்தியடைந்த பணிப்பெண் சிறுவனை தரையில் இழுத்து, அறைந்து, உதைத்தும் துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சிறுவனைத் தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர், 25 வயதான இந்தோனேசிய நாட்டை சேர்ந்த சகினா என்ற அந்த பணிப்பெண்ணுக்கு புதன்கிழமை மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்கும் உத்தரவு இருப்பதால் சிறுவனின் பெயர் மற்றும் குற்றம் நடந்த இடம் ஆகியவை வெளியாகவில்லை.

சகினா கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறுவனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறார்.

தனது முதலாளியின் நான்கு குழந்தைகளை கவனித்து, வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.

பிள்ளைகளை பள்ளிக்குத் தயார்படுத்தி, அவர்கள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதை உறுதி செய்வது தான் சகினாவின் பொறுப்பாகும். ஆனால், தன்னுடைய பொறுப்புகளை மறந்த பணிப்பெண், சிறுவனை தாக்கி துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் கேமராவில் பிடிபட்டது.

(Visited 41 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்