ஐரோப்பா

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யாவின் அதிர்ச்சி செயல்

உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதலில் 14 வயது சிறுமி பலியானதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள நகரின் 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் 59 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க உக்ரைனின் அனைத்து சர்வதேச பங்காளிகளும் உழைக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

மாஸ்கோவின் இராணுவம் கடந்த வாரத்தில் உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி தனது விமானப்படையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலெஷ்சுக்கை பணிநீக்கம் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் 59 பேர் மற்றும் குழந்தைகள் காயமடைந்து இருபது பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

சிலரது கைகால்களை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!