இலங்கை

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் கொள்வனவிற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்!

தனது சிறுநீரகத்தை விற்று ஏழு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு அந்த பணத்தை பயன்படுத்தி ஐஸ் மருந்துகளை வாங்கி விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பகுதியில் வைத்து பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் வியாபாரத்தை ஆரம்பிக்க பணம் இல்லாததால் தனது சிறுநீரகத்தை விற்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நபர் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!