உலகம் செய்தி

துருக்கியில் அதிர்ச்சி – மது அருந்திய 37 பேர் மரணம் – 14 பேர் கைது

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மதுபானம் குடித்த 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 17 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக அந்நகர ஆளுநர் கூறினார். கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 77 பேர் மதுபானம் குடித்ததால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் 23 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். மதுபானத்தில் Methanol எனும் நச்சுப் பொருள் கலந்தது சம்பவத்திற்குக் காரணம் என நம்பப்படுகிறது.

அதனால் கண் பார்வை, கல்லீரல் பாதிக்கப்படலாம். மரணம்கூட ஏற்படலாம். சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச் சாராயம் எனச் சந்தேகிக்கப்படும் சுமார் 14,700 போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!