ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் அதிர்ச்சி – இன்ஸ்டாகிராம் லைவில் மனைவி – மகனை கொன்ற நபர்

ஐரோப்பிய நாடான போஸ்னியாவில் இன்ஸ்டாகிராமில் லைவ் போட்டு முன்னாள் மனைவி மற்றும் மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடி பில்டர் ஒருவர் தனது முன்னாள் மனைவியை இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர், தப்பி ஓடிய தனது மகனையும் மேலும் ஒரு நபரையும் கொலை செய்திருக்கிறார்.

வடகிழக்கு போஸ்னிய நகரமான Gradacac-ல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

மேலும், அங்கு தாக்குதல் நடத்திய பாடி பில்டர், நகரத்தில் உலா வந்த மேலும் மூன்று நபரை காயப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, பொலிஸார் அவரை கைது செய்யப்படுவதற்கு முன்பும் தன்னை தானே தற்கொலை செய்துகொண்டார் என்று அந்நாட்டு நகர பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!