ஆசியா செய்தி

சீனாவில் வளர்ப்பு பூனையால் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் வளர்ப்புப் பூனையின் செயலினால் பெண் ஒருவர் தனது வேலையை இழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சீனாவின் சோங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அவர் பணிப்புரியும் நிறுவனத்திலிருந்து தனது வேலையை இராஜினாமா செய்வதாக தனது மடிக்கணினியில் கடிதம் ஒன்று தட்டச்சு செய்து வைத்துள்ளார்.

ஆனால், வேலையை இழந்துவிட்டால் தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளை எப்படி கவனித்து கொள்வது என்ற யோசனையில் அதனை அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.

அப்போது, திடீரென அவரது வளர்ப்புப் பூனைகளில் ஒன்று அந்த மடிக்கணினியின் மீது குதித்துள்ளது. அதில், அந்த பூனையின் கால் பட்டதில் அந்த மடிக்கணினியின் பட்டன்கள் அழுத்தப்பட்டு அந்த கடிதம் அப்பெண்ணின் நிறுவனத் தலைவருக்கு சென்றுள்ளது.

அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரது நிறுவனத்தை அழைத்து நடந்தவற்றை கூறியுள்ளார்.

ஆனால், அவரது விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாத நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

இதனால், வேலையை இழந்த அந்த பெண்ணுக்கு வருட முடிவில் கிடைக்கும் ஊதிய வெகுமதியும் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

(Visited 62 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!