பிரித்தானிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளன கப்பல் : ஒருவர் மாயம்!
பிரித்தானியாவின் யார்க்ஷயர் பகுதியில் இரு கப்பல்கள் மோதி விபதுக்குள்ளானதில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர காவல்படையினர் 36 பேரை மீட்டனர். மயமானவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரக்குக் கப்பலில் சோடியம் சயனைடு 15 கொள்கலன்கள் மற்றும் அறியப்படாத அளவு மதுபானம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடல் வளம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 46 times, 1 visits today)





