இந்தியா இலங்கை

மகனுக்காக காத்திருந்த தாய்!! உடல் மட்டும் இலங்கை செல்கின்றது… பிரேத பரிசோதனை முடிந்தது

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

இந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்து விட்டதாகவும் இன்று அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த சாந்தன் சமீபத்தில் விடுதலை ஆனாலும் அவர் இலங்கை செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முன்பு தான் அவர் இலங்கைக்கு செல்ல இருந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி அவர் இன்று காலை உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் பரிசோதனை முடிந்து விட்டதாகவும் எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சாந்தன் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி தான் மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

தனது மகனுக்காக போராடி அவரை யாழ்ப்பாணம் வரவைத்து விட வேண்டும் என்று பல கனவுகளுடன் காத்திருந்த தாய்க்கு, தற்போது மகனின் உடல் தான் இலங்கைக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!