இலங்கை செய்தி

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் இட நெருக்கடி!! ஷிப்ட் முறையில் தூங்கும் கைதிகள்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 300% அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 36 சிறைச்சாலைகள் உள்ளன, அவற்றில் தங்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஐ நெருங்குகிறது.

எனினும் சிறைச்சாலைகளில் 31,000க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாக சிறைத் திணைக்களம் கூறுகிறது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 670 கைதிகள் அடைக்கப்படலாம் எனவும், 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் சுமார் 300 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 2000க்கும் அதிகமாகும்.

தற்போது மஹர சிறைச்சாலையில் சுமார் 670 கைதிகளுக்கான வசதிகள் உள்ளன, ஆனால் 2500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 270 கைதிகளை அடைக்கக்கூடிய காலி சிறைச்சாலையில் சுமார் 1100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் கூறுகிறது.

இந்நிலைமையால் பல சிறைச்சாலைகளில் சந்தேகநபர்கள் மாறி மாறி உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய சிறைச்சாலைகளிலும் இந்த நிலை தோன்றியமையால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதனால் அவர்கள் தற்போது பணியிலிருந்து விலகிச் செல்வதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!