ஆசியா

தென்கொரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு : 14 பேர் பலி, பலர் மாயம்!

தென் கொரியாவில் ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காணாமல் போனதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

சியோலின் வடகிழக்கே உள்ள கேப்யோங் நகரில், வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை தெற்கு நகரமான சான்சியோங்கில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்ததாகவும், இதில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் ஆறு பேர் காணாமல் போனதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேப்யோங் மற்றும் தெற்கு நகரமான குவாங்ஜுவில் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை தெற்குப் பகுதிகளில் சுமார் 600-800 மில்லிமீட்டர் (24-31 அங்குலம்) வரை மழை பெய்துள்ளதாக அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!