இலங்கை செய்தி

இலங்கையில் கடும் வறட்சி – நீர் விநியோகம் பாதிப்பு

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நீர் விநியோகம் 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராய்ச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, 06 நீர்வடிகாலமைப்பு முறைமைகளின் ஊடாக நீர் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குளத்து நீர் மாசடைவதால் களனி கங்கை ஊடாக தற்காலிக தடுப்பு அணை அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக களு கங்கையின் நீரை சுத்திகரிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை