உச்சக்கட்ட வெப்பத்தினால் கடும் நெருக்கடி – மீண்டுவர போராடும் இந்தியா
![](https://iftamil.com/wp-content/uploads/2023/06/india-2-jpg.webp)
இந்தியாவில் உட்பட ஆசிய நாடுகளில் கடும் வெப்பம் ஆசியா வட்டாரத்தைச் சுட்டெரிப்பதுடன் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
கடந்த வாரத்திலிருந்து சுமார் 170 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
பீஹார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் அந்த மரணங்களுக்கும் வெப்பத்துக்கும் சம்பந்தமில்லை என்று உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலியா (Ballia) மாவட்டத்தில்தான் அனைத்து மரணங்களும் நேர்ந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
மாசுகலந்த நீரால் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவித்தன. அதனை விசாரிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பாலியா மாவட்டத்தில் இன்னும் சுமார் 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
(Visited 5 times, 1 visits today)