ஆசியா

பாகிஸ்தானில் வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் பலி, இருவர் காயம்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இரு வேறு சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

இதில் முதல் சம்பவத்தில் பத்கேலா நகரில் பகதூராபாத் பகுதியில், 2 குழுக்கள் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் ஒருவரையொருவர் சுட்டு கொண்டனர்.இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள், ஒருவர் காயமுற்றார்.

இதேபோன்று, குர்ராம் பழங்குடியின மாவட்டத்தில், லோயர் குர்ராம் பகுதியில் டேட் குமார் என்ற இடத்திற்கு அருகே பஸ்சை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும், சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

(Visited 65 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!