ஆசியா

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தீவிர ராக்கெட்டுகள் தாக்குதல்!

இஸ்ரேலின் வடபகுதியில் லோயர் கலிலீ என்ற இடம் நோக்கி லெபனான் நாட்டில் இருந்து ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இன்று காலை ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்

இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

எனினும், இவற்றில் சில ராக்கெட்டுகளை இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் வான் பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தி முறியடித்தனர். அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.34 மணியளவில், ராக்கெட் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை விடப்பட்டது.

லெபனானின் எல்லையையொட்டிய ரமோத் நப்தாலி பகுதியில் இந்த எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், எந்தவித பாதிப்போ அல்லது உயிரிழப்போ பதிவாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த வியாழக்கிழமை, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானம் ஆகியவற்றை கொண்டு வட இஸ்ரேலின் மீது ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் பெரிய அளவில் நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் அதிகாரி ஒருவர் பலியானார். தங்களுடைய படை தளபதிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஹிஜ்புல்லா அமைப்பினரின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் படையினர், 200 ராக்கெட்டுகள் மற்றும் வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் 20 ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

See also  பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் : 06 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில், ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 28 வயது இஸ்ரேல் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

வடக்கு லெபனானின் பால்பெக் நகர் மீது இஸ்ரேல் படையினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதில், ஹிஜ்புல்லா அமைப்பின் வான் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மெய்தம் முஸ்தபா ஆல்டார் என்ற முக்கிய நபர் கொல்லப்பட்டார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content