இலங்கை

இலங்கையில் தமிழர் தரப்பு பிரிந்து செயற்பட்டால் ஆபத்து – செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

தமிழர் தரப்பு பிரிந்து செயற்படுமாயின், எதிர்காலத்தில் தங்களது பிரதிநிதித்துவத்துக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தமிழர் தரப்பு ஒற்றுமையாகச் செயற்பட்டு, அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும் என்பதையே இந்திய அரசும் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய, ஓரணியில் போட்டியிடுவதாயின் வீடு அல்லது குத்துவிளக்கு அல்லாத ஒரு பொது சின்னத்தில் களமிறங்குவது பொருத்தமானதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!