பஞ்சாபில் ஒரே வாரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டாவது கபடி வீரர்
பஞ்சாபின் லூதியானா(Ludhiana) மாவட்டத்தின் மான்கி(Manki) கிராமத்தில் அடையாளம் தெரியாத நான்கு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 23 வயது கபடி வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக அக்டோபர் 31ம் திகதி, லூதியானாவின் ஜக்ரான்(Jagran) பகுதியைச் சேர்ந்த கபடி வீரர் தேஜ்பால் சிங்(Tejpal Singh) கொல்லப்பட்ட சில தினங்களுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மான்கி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் குர்விந்தர் சிங்(Gurvinder Singh), தனது நண்பர்களான தரம்வீர் சிங்(Dharamvir Singh) மற்றும் லவ்ப்ரீத் சிங்குடன்(Lovpreet Singh) இரவில் ஒரு கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலில் குர்விந்தரின் நண்பர் தரம்வீர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி சாம்ராலாவில்(Chamrala) உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





