அறிவியல் & தொழில்நுட்பம்

மனித உணர்வுகளை கொண்ட ரோபோவை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

அமெரிக்காவில்மனிதனை போன்ற உணர்வுகள் கொண்ட ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நமது உலகில் விஞ்ஞானமானது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில் ஒரு படியாக விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர்.

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அது என்னவென்றால் வியர்வை, நடுக்கம் மற்றும் மூச்சு விடுதல் போன்ற உணர்வுகள் அடங்கிய ஒரு புதுவித ரோபோவை உருவாக்கி உள்ளனர்.

இந்த ரோபோ ஆன்ட்டி (ANDI) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதுமையான ரோபோவை அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து தெர்மெட்ரிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆன்ட்டி ரோபோ உலகின் முதல் வியர்க்கக்கூடிய ரோபோவாகும்.

அரிசோனா மாநில பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான கொன்ராட் ரைகாசெவ்ஸ்கி கூறுகையில், ஆன்ட்டி ரோபோவானது மனித உடலில் வெப்பம் மற்றும் தீவிர வெப்பநிலையின் விளைவுகளை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 35 தனித்தனியாக கட்டுப்படுத்தக்கூடிய மேற்பரப்புகள் உள்ளது. இந்த மேற்பரப்புகள் மனித உடலில் காணப்படும் சிறிய துளைகள் போல இருக்கும். இதனால் இந்த ரோபோவானது வெவ்வேறு வெப்ப நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது என்று கூறியுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்