ஐரோப்பா

இங்கிலாந்தில் தலைத்தூக்கும் மருந்து பற்றாக்குறை : சிக்கலில் நோயாளர்கள்!

இங்கிலாந்தில் பல மருத்துவமனைகள் மருந்து பற்றாக்குறையுடன் போராடி வருவதாக கருத்து கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதனால் நீரிழிவு, கை,கால் வலி உள்ளிட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக Community Pharmacy England தெரிவித்துள்ளது.

6,000 க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையிலும், 2000 ஊழியர்கள் வழங்கிய தகவலுக்கு அமையவும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய அனைத்து (97%) ஊழியர்களும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அனைத்து (99%) மருந்தகங்களும் குறைந்தபட்சம் வாரந்தோறும் விநியோகப் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக புகாரளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2020 மற்றும் 2023 க்கு இடையில் மருந்து தட்டுப்பாடு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரெக்சிட்டிற்குப் பிறகு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்த நிலையில், மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அதிகளவு பணம் செலுத்த வேண்டியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நோயாளிகளுக்கு, அவர்களுக்குத் தேவையான மருந்துகளை அணுகாமல் இருப்பது மிகவும் தீவிரமான விளைவுகளுக்கு வழிவகுக்கலாம், மேலும் அவர்கள் A&E ஐப் பார்வையிட வேண்டிய நிலையும் கூட ஏற்படலாம் எனவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!