இலங்கை

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை தடுக்கக் கோரிய இரண்டாம் மனுவும் நிராகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தலை நிறுத்துமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

வழக்கு செலவுக் கட்டணமாக 5 இலட்சம் ரூபாவை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், சட்டத்தரணி அருண லக்சிரியினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி FR மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அரசியலமைப்பின் 19வது திருத்தம் இன்னும் முறையாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதி தேர்தலை நிறுத்துமாறு சட்டத்தரணி அருண லக்சிறி தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த நிலையில் தேர்தலை நடத்துவது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை மேலும் கோரியுள்ளார்.

இதேவேளை, சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த FR மனுவை நிராகரிக்குமாறு கோரி எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.

எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவினால் இன்று உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content