செய்தி மத்திய கிழக்கு

வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதரை சவூதி நியமித்துள்ளது

வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதரை சவூதி அரசு நியமித்துள்ளது.

அதன்படி, தற்போது ஜோர்டான் தூதராக பணியாற்றி வரும் நயீப் அல் சுதைரி, பாலஸ்தீன தூதுவராகவும் பணியாற்றவுள்ளார்.

தற்போது, ​​பாலஸ்தீனியர்கள் மத்தியதரைக் கடல் பகுதி, மேற்குக் கரை மற்றும் காசா பகுதி ஆகியவற்றில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

தூதுவர் நியமனம் பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்கான சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுடன் முறையான இராஜதந்திர உறவுகள் பரிசீலிக்கப்பட்டு வரும் பின்னணியிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்தச் சிக்கல் நிலை 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தின் மூலம் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் நிலம் பிரிக்கப்பட்டது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!