இலங்கை

இலங்கையில் கடுமையான பொருளாதார சிக்கலில் உப்பு உற்பத்தியாளர்கள்

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உப்பு, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

15,000 மெற்றிக் டன்னுக்கும் அதிகளவான இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான உப்பு தட்டுப்பாட்டுக்குப் பிரதான காரணம், உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய ஒளி இன்மையும், தொடர்ந்து பெய்துவரும் மழையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் மொத்த உப்பு உற்பத்தியில் புத்தளம் 60 சதவீத பங்களிப்பை வழங்குவதுடன், போதுமானளவு சூரிய ஒளி கிடைக்கும் காலப்பகுதியில் ஒரு இலட்சம் மெற்றிக் டன்னுக்கும் அதிகளவு உப்பினை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக உப்பு உற்பத்தி தடைப்பட்டமையினால் உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்