ஈரான் தூதரகத்துக்கு சென்றார் சஜித்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்றார்.
ஈரானிய தூதரைச் சந்தித்து, மோதல்களால் உயிரிழந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரானியர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார்.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.
தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த விசேட அனுதாப குறிப்புப் பதிவேட்டில், ஈரானிய மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபக் குறிப்பைப் பதிவிட்டார்.





