அரசியல் இலங்கை செய்தி

தாய் வீடு திரும்புகிறார் சஜித்: சாவிக் கொத்தை கையளிப்பாரா ரணில்?

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஒரு குடையின்கீழ் இருந்த கட்சிதான் தற்போது இரு அணிகளாக பிளவுபட்டுள்ளன. எனவே, மீள் இணைவு என்பது கடினமாக இருக்காது.

இரு கட்சிகளின் கொள்கைகளும் ஒத்துப்போகின்றன. மேற்படி கட்சிகளின் சங்கமமானது 2026 ஆம் ஆண்டில் நிச்சயம் சாத்தியப்படும்.

இடதுசாரி ஆட்சியெனக் கூறிக்கொண்டு ஏதேச்சாதிகாரமாக செயல்படும் இந்த என்.பி.பி. அரசுக்கு எதிராக வலதுசாரிகள் ஒன்றுபட வேண்டும்.” – என்றார் எஸ்.எம். மரிக்கார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான நேரடி சந்திப்பும் இம்மாதம் நடக்கவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாச ஏற்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமைப் பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!