இலங்கையில் 02 மாதங்களில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து சஜித் கேள்வி!

நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வன்முறைக் குற்றங்களுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாராளுமன்றத்தில் பிரேமதாச தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கை ஆகியவற்றில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் இலக்கு படுகொலைகளின் அதிகரித்து வரும் செல்வாக்கு பொதுமக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது என்று வாதிட்டார்.
சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்வதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
உரிய நடைமுறைக்கு அரசாங்கம் உறுதியளித்த போதிலும், காவலில் உள்ள சந்தேக நபர்களைக் கையாள்வதற்கான பொலிஸ் நெறிமுறைகளை அமுல்படுத்துவது குறித்து பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
பொலிஸ் சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை மறுஆய்வு செய்ய அழைப்பு விடுத்த அவர், குற்றவியல் வலைப்பின்னல்களின் அதிகரிப்பு குறித்த தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.