இலங்கை செய்தி

இலங்கையில் மின் தடைக்கான காரணத்தை வெளியிட்ட சஜித் பிரேமதாச!

இலங்கையில் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கைக் குறை கூறிய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள்மீது பழி சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையான பிரச்சினை என்ன என்பதை இனங்காண அவர்கள் சிந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது x கணக்கில் இது தொடர்பில் பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.

சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவையுள்ள காலங்களை நிர்வகிக்கத் தவறிய மோசமான நிர்வாகமும்தான் மின்தடைக்கான உண்மையான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்தடை தொடர்பிலான உண்மை நிலையை இது போன்ற தவறான தகவல்கள்மூலம் மறைக்க முடியாது என்றும், மின் துறையில் சீர்திருத்தங்கள்மூலம் மட்டுமே அதை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தகைய அமைப்பில் மாற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகிறார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை