இலங்கை

இலங்கை பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டின் உயர்மட்ட தலைவர்களுடன் தொடர்ச்சியான உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில்,கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், பிரதமர் ஹரினி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் SJB தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை சந்தித்தார்.

பிராந்திய பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவையும் சந்தித்துள்ளார்.

(Visited 18 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்