உலகம் செய்தி

நாடு திரும்பிய கர்நாடகாவில் குழந்தைகளுடன் குகையில் வசித்து வந்த ரஷ்ய பெண்

கர்நாடகாவில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண் ஒருவர் ரஷ்யா திரும்பியுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவர் இவான் மெல்னிகோவ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்றம், அவர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக பயண ஆவணங்களை வழங்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. அவர்கள் மறுநாள் ரஷ்யாவுக்குச் சென்றனர் என்று வெளிநாட்டினரின் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீனா குடினா என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், ஜூலை 11 அன்று கும்தா தாலுகாவில் உள்ள கோகர்ணா அருகே உள்ள ராமதீர்த்த மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் தனது குழந்தைகளுடன் இரண்டு மாதங்களாக பயண அல்லது குடியிருப்பு ஆவணங்கள் இல்லாமல் அங்கு வசித்து வந்தார்.

40 வயதான அவர், ஆன்மீக தனிமையைத் தேடி கோவாவிலிருந்து கோகர்ணாவுக்குப் பயணம் செய்ததாகவும் நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விலகி தியானம் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக காட்டுக் குகையில் வாழத் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!