ஐரோப்பா செய்தி

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய தாக்குதல் – 9 பேர் காயம்

தெற்கு உக்ரைனின் கெர்சனில்(Kherson) உள்ள ஒரு குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியதில் நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மூன்று மருத்துவ ஊழியர்களும் 9 வயது சிறுமியும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஏனையோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கெர்சன் ஆளுநர் ஒலெக்சாண்டர் புரோகுடின்(Oleksandr Prokudin) குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், “மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைப்பது போர் அல்ல, இது முற்றிலும் பயங்கரவாதம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்” என்று உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ(Yulia Svyrydenko) தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!