ஐரோப்பா

கொடிய தாக்குதல்களை ஆரம்பித்த ரஷ்யா – மேற்குலக நாடுகளுக்கும் எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது புதிய கொடிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் மாத்திரம் 100,000 ரஷ்ய துருப்புகள் போரில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.

மாஸ்கோ போரை இழுத்தடிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கிடையில் தனித்தனியாக, மாஸ்கோ மேற்கு நாடுகளுக்கு அணு ஆயுதப் போர் எச்சரிக்கையை வெளியிட்டது.

புடின் தனது புதிய கடல் ட்ரோன்கள் நேட்டோ கப்பல்களை எவ்வாறு வெடிக்கச் செய்யலாம் என்பதை பால்டிக் கடலில் காட்டும் வகையில் படங்கள் வெளிவந்துள்ளன.

உக்ரைன் போர் குறித்து டிரம்ப் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருடன் விவாதிக்க உள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஃபாக்ஸ் நியூஸிடம், புடினின் தாமதப்படுத்தும் தந்திரோபாயங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியது குறித்து ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளதாக தெரிவித்து்ளளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்