ஆசியா

போரால் சேதமடைந்த பகுதிகளை கட்டியெழுப்பும் ரஷ்யா : 5000 வீரர்களை அனுப்பும் வடகொரியா!

ரஷ்யாவின் குர்ஸ்க் ஒப்லாஸ்ட்டுக்கு வட கொரியா 5,000 இராணுவ கட்டுமானத் தொழிலாளர்களையும் 1,000 சப்பர்களையும் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் உக்ரேனிய ஊடுருவலால் ஏற்பட்ட பரவலான சேதத்தை மாஸ்கோ சரிசெய்து வருவதாக கிரெம்ளினின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காகவே மேற்படி தொழிலாளர்கள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரேனிய இராணுவத்தால் படையெடுக்கப்பட்டு, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யப் படைகளால் மீண்டும் கைப்பற்றப்பட்ட மூலோபாய எல்லைப் பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப தொழிலாளர்கள் உதவுவார்கள் என்று ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்கு கூறினார்.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடனான திரு. ஷோய்குவின் சந்திப்பில் தொழிலாளர்களை அனுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content