ஐரோப்பா செய்தி

கடல் அலைகளை தூண்டி சுனாமியை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த அணுவாயுதத்தை சோதனை செய்த ரஷ்யா!

கடல் அலைகளை தூண்டி சுனாமியை ஏற்படுத்தும் சக்தி கொண்ட, யாராலும் தடுக்க முடியாத சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை ரஷ்யா நீருக்கடியில்  இன்று சோதனை செய்துள்ளது.

‘போஸிடொன் (Poseidon) எனப்படும் அணு டார்பிடோவை (nuclear torpedo) சோதனை செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.

இந்த டார்பிடோவானது 1,600 அடி  கடல் ஆழத்தில் பிரித்தானியாவை மூழ்கடிக்கும் திறன் கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை முயற்சியை குறிப்பிடத்தக்க வெற்றி என அறிவித்த புட்டின், இதனை இடைமறிக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

A graphic showing the powers of Poseidon

‘டூம்ஸ்டே’  (Doomsday) ஆயுதத்திற்கான முதல் போர்முனைகளை ரஷ்யா 2023 இல் தயாரிக்கத் தொடங்கியது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே ‘போஸிடொனை (Poseidon) முற்றிலும் புதிய வகை பழிவாங்கும் ஆயுதம் என்று வர்ணித்துள்ளனர்.

இந்த ஆயுதம் ஏவப்பட்டால் அல்லது பயன்படுத்தப்பட்டால் அந்த கடற்பகுதியை  வாழ தகுதியற்றதாக மாற்றும் திறன் கொண்டது எனக் குறிப்பிடப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி