ஐரோப்பா

உக்ரைனின் (Ukraine) அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து தாக்கிய ரஷ்யா – 10 பேர் பலி!

உக்ரைன் (Ukraine) முழுவதும் நேற்று இரவு ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு உக்ரைனின் டெர்னோபிலில் (Ternopil) உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 12  குழந்தைகள் உள்பட 37 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் வோரோனெஷில் (Voronezh) உக்ரைன் நான்கு ATACMS ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதில் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லம் ஆகியவை சேதமடைந்ததாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளை கடந்து நடந்து வரும் இந்த போரால் இரு தரப்பில் இருந்தும் கடுமையான அழிவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!