பிரித்தானியாவை அச்சுறுத்த அணுக் குண்டுவீச்சு விமானங்களை அனுப்பிய ரஷ்யா!
பிரித்தானியாவை அச்சுறுத்தும் நோக்கில் நோர்வே கடல் வழியாக நீண்ட தூர அணுக் குண்டு வீச்சு விமானங்களை ரஷ்யா அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்குலக நாடுகளை கோபமடைய செய்ய வேண்டுமென்றே ரஷ்யா மேற்படி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“ரஷ்ய விண்வெளிப் படைகளின் Tu-95MS நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் நோர்வே கடல் வழியாக கொண்டுவரப்பட்டுள்ளதாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த விமானங்கள் 07மணிநேரத்திற்கும் அதிகமாக பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கரடிகள்” என்று அழைக்கப்படும் இந்த விமானங்கள் முதன்முதலில் 1950களில் பறக்கவிடப்பட்டன, ஆனால் இன்னும் புடினின் அணுசக்தி முக்கோணத்தின் முக்கிய அம்சமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.





