ஐரோப்பா

வட கொரியாவுக்கான சாலைப் பால கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ள ரஷ்யா – பிரதமர்

வடகொரியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் சாலைப் பாலத்தைக் கட்டும் பணிகள் தொடங்கிவிட்டதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்பாலம் கட்டப்படுவதாக அவர் கூறினார்.

ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே ஏற்கெனவே ஒரு பாலம் உள்ளது.அதற்கு நட்புப் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது.கொரியப் போருக்குப் பிறகு அந்தப் பாலம் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான துவக்க விழாவில் மிஷுஷ்டின் கலந்துகொண்டு பேசினார்.

இப்பாலம் ரஷ்யா-வடகொரியா உறவுகளுக்கு மிகவும் முக்கியமானது என்றார் அவர்.

“அண்டை நாடுகள் என்ற முறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யாவும் வடகொரியாவும் விரும்புகின்றன. இதற்கான சின்னமாகப் புதிய பாலம் திகழும்,” என்றார் மிஷுஷ்டின்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!