ஐரோப்பா செய்தி

வெனிசுலா கடற்கரையில் படகுகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம்

வெனிசுலா கடற்கரையில் சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

வெனிசுலா வெளியுறவு அமைச்சர் யுவான் கிலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சர்வதேச கடல் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் வெனிசுலாவின் தலைமை மற்றும் மக்களுக்கு ரஷ்யா முழு ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 3ம் திகதி கரீபியன் கடலில் ஒரு படகில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக குற்றம் சாட்டி, அமெரிக்கா நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி