உக்ரைனின் தற்காப்பு கோட்டையை கைப்பற்றிய ரஷ்யா : சீர்குலையும் அமைதி ஒப்பந்தம்!
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) மற்றும் வோவ்சான்ஸ்க் ( Vovchansk) ஆகிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய படைகள் நேற்று அறிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆதாரங்களை முன்வைக்காமல் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் அமைதி ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது போரில் ரஷ்யா முன்னேறி வருகிறது, சமரசம் செய்யத் தேவையில்லை என்ற செய்தியை அனுப்பும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் உக்ரைனின் இராணுவம் புடினின் கூற்றுக்களை மறுத்துள்ளது. போக்ரோவ்ஸ்கில் (Pokrovsk) ரஷ்யாவின் முன்னேற்றங்களை உக்ரைன் படைகள் தொடர்ந்து தடுத்து நிறுத்துகின்றன” என்று உக்ரைனின் 7வது விரைவு பதில் படையினர் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் முக்கியமான தற்காப்பு கோட்டையான போக்ரோவ்ஸ்கை கைப்பற்றுவதற்காக ரஷ்யா ஒன்றரை வருடங்களாக முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




