உக்ரைனை குறைந்தது 597 ட்ரோன்களை கொண்டு தாக்கிய ரஷ்யா – இருவர் பலி!

நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் இரண்டு டஜன் குரூஸ் ஏவுகணைகள் மூலமாக ரஷ்யா உக்ரைனை குறிவைத்து தாக்கியுள்ளது. இதில் இருவர் பலியாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தென்மேற்கில் உள்ள செர்னிவ்ட்சியில் மாஸ்கோ இரவு நேர தாக்குதல்களைத் தொடர்ந்ததாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
தாக்குதலின் இலக்குகள் கிழக்கில் உள்ள கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளிலிருந்து மேற்கில் உள்ள லிவிவ் பகுதி வரை நீண்டுள்ளன என்று கூறினார்.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யா இரவு முழுவதும் குறைந்தது 597 தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் 26 குரூஸ் ஏவுகணைகளை ஏவியது.
சுமார் 319 ட்ரோன்கள் மற்றும் 25 ஏவுகணைகள் உக்ரைனின் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, இராணுவம் டெலிகிராம் செய்தி செயலிக்கு குறிப்பிட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)