உக்ரைனின் பிரைலுகி நகர் மீது தாக்குதல் நடத்திய ரஸ்யா – ஐவர் பலி!

உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள பிரைலுகி நகர் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்ததாக வியாசெஸ்லாவ் சாஸ் கவர்னர் தெரிவித்துள்ளார். 5 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
6 டிரோன்கள் பிரைலுகி பகுதியில் இன்று அதிகாலை தாக்கியது. இதில் பல குடியிறுப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் கிழக்கு உக்ரைன் நகரான கார்கீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கர்ப்பிணி பெண், குழந்தைகள் உள்பட 17 பேர் காயம் அடைந்துள்ளனர். இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை டிரோன் தாக்கியது. இதில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.
சில தினங்களுக்கு முன் உக்ரைன் ரஷியாவின் விமானத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பல விமானங்கள் சேதடைந்தன.
(Visited 2 times, 1 visits today)